districts

தமிழ்ப் பல்கலை.,யில் இலங்கை மலையகம் 200 மாநாடு

தஞ்சாவூர், ஏப்.1-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை  சார்பில் இலங்கை மலையக இலக்கியம் - 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்த ரங்கத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்கலை.,யில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பில் செப்டம்பர் மாதம் இலங்கை மலையகம் 200 மாநாடு நடைபெறவுள்ளது என துணைவேந்தர் வி. திருவள்ளுவன், இலங்கையின் இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் துணைத் தூதர் (கண்டி/யாழ்ப்பாணம் துணைத் தூதரகங்கள்) ஆ.நடராஜன், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் ஆகியோர் அறிவித்தனர். இதில், இலங்கை, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள் பங்கேற்கவுள்ளனர். கருத்தரங்கில், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், இலங்கையின் பேரா தனைப் பல்கலை., பேராசிரியர் பெருமாள் சரவணகுமார், இங்கிலாந்து தமிழ் எழுத்தா ளர் பி.ஏ.காதர், ஆஸ்திரேலியாவின் வழக்கு ரைஞர் சந்திரிகா சுப்ரமண்யன், அயல்  நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைப் பேராசிரி யர்கள் ஞா.பழனிவேலு, தெ.வெற்றிச்செல் வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.