தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை 130 மாணவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் வழங்கினார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி, கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.