districts

img

அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்    

அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வலியுறுத்தினர்.        

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாதாந்திரக் கூட்டம், வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமையில், பட்டுக்கோட்டை மெரினா அரங்கில்  நடைபெற்றது. இரா.இளஞ்சேரன் வரவேற்றார். வட்டச் செயலாளர் இரா.அண்ணாதுரை வேலை அறிக்கை, வட்டப் பொருளாளர் எஸ்.ஆறுமுகம் பொருளாளர் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். மாவட்ட தலைவர் ஆர். கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணைத்தலைவர் பி.சமுதாக்கனி, மாவட்ட இணைச் செயலாளர் சி.பிச்சைமுத்து, வட்ட துணைத் தலைவர் த.சந்திரமோகன், பட்டாபிராமன் ஆகியோர் பேசினர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து பாலச்சந்திரன் பேசினார்.      

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சண்முகம், பூபாலசிங்கம், வட்ட இணைச் செயலாளர் இரா.புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்ட இணைச் செயலாளர் ரெ.ஞானசூரியன் நன்றி கூறினார்.      முன்னதாக, மறைந்த ஓய்வூதியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜூலை மாதம் பிறந்த 47 உறுப்பினர்களுக்கு, முன்னாள் கூட்டுறவு துணைப்பதிவாளர் சிவ.சுந்தர்லால் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.      

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில், வட்டக்கிளை சார்பில் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தல் நேரத்தில் திமுக ஓய்வூதியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரவேண்டும். அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.