districts

மணல் லாரி மோதி மாணவி படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், நவ.29-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜின் மகள் வைஷ்ணவி (13). இவர் ஆச்சனூர் உயர்  நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து  வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் கடையத்தோப்பு முதன்மைச்  சாலையிலிருந்து வைத்தியநாதன்பேட்டை சாலைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மருவூர் மணல் குவாரியிலிருந்து  மணல் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதி யது. இதில் படுகாயமடைந்த வைஷ்ணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த வைத்தி யநாதன்பேட்டை கிராம மக்கள் 100 பேர் திரண்டு, கடையத்தோப்பு முதன்மைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்த திருவையாறு வட் டாட்சியர் பழனியப்பன், தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.என். ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காலை, மாலை பள்ளி  மாணவ, மாணவிகள் வந்து செல்லும் நேரத்தில் மணல் லாரிகளை இயக்கக்  கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி வைஷ்ண விக்கு மருத்துவம் உள்பட அனைத்து உதவி களும் செய்ய வேண்டும். கடையத்தோப்பு முதன்மைச் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். கூடுதலாக காவலர்  களை நியமிக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. இது தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.