districts

கொள்ளை போன நகைகள் மீட்பு  

கும்பகோணம், மார்ச் 11. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல்  நிலைய சரகம் பெரிய கடை தெருவில் உள்ள பத்மநாபன் சந்து பகுதியில் கடந்த மார்ச் 5 அன்று நகை செய்யும்  பட்டறையை உடைத்து சுமார் 55 கிராம் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவுப்படி, தனிப்படையினர் அமைக்கப்பட்டு கும்பகோணம், காரைக்கால், திருச்சி ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தும், செல்போன் பதிவுகளை ஆராய்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதில், கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி மாநகரம் குட்செட் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜான் போஸ், செபாஸ்டி யர் கோயில் தெரு சந்தோஷ் முருகவேல் ஆகிய இரு வரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 55 கிராம்  தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இரு வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.