தஞ்சாவூர், ஜன.8- மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நிகழாண்டு தஞ்சாவூரில் நடத்தப் படும் என தமிழ்நாடு கேரம் விளையாட்டு சங்கத்தின் தலைவரும், தஞ்சாவூர் மாந கராட்சி மேயருமான சண்.ராமநாதன் தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், “இந்த விளை யாட்டுப் போட்டியை ஊக்குவிக்க, வகையில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் அதிக மானோர் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். இந்தாண்டு தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான போட்டிகளும், மாநில அளவிலான போட்டிகளும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த 50 ஆவது தேசிய சீனியர் கேரம் சாம்பியன் போட்டியில், பெண்கள் அணியில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தமிழ்நாடு கேரம் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, வெற்றி பெற்றவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ள னர். இந்த விளையாட்டை வரும் தலை முறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல கட்டப் போட்டிகள் நடத்தப்படும்” என்றார். முன்னதாக தமிழ்நாடு கேரம் சங்கத்தின் செயலாளர் நாசர் கான், பொருளாளர் மரிய இருதயம், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கேரம் சங்க நிர்வாகி கள் மேயர் சண்.ராமநாதனை சந்தித்து, சங்கத் தின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப் பட்டதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.