மெலட்டூர், ஜன.13- தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி மெலட்டூர் வள மீட்பு பூங்காவில் நடைபெற்றது. பேரூ ராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலு வலர் குமரேசன், கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற் றனர். தூய்மைப் பணியாளர்கள், குழுப் பணியாளர்களுக்கு பொங்கல் பானை, அரிசி, அச்சு வெல்லம் வழங்கப்பட்டது. இதேபோல், பாபநாசம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தலைவர் பூங்குழலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.