தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சாவூர் அன்னை சத்யா விளை யாட்டரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம், வாலி பால் விளையாட்டு தளம் உட்பட ரூ.5 கோடி யில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார். தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கம், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அன்னை சத்யா விளையாட்டரங்கத் தில் ரூ.3 கோடியில் நடைபயிற்சி மேற்கொள் ளும் வகையில் 1,200 மீட்டர் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் மற்றும் இருக் கைகள் அமைக்கப்பட்டன. ரூ.2 கோடியில் திறந்தவெளி ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம், கழிப்பறைகள், நுழைவாயில் மற் றும் வாலிபால் மைதானங்கள் அமைக் கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம், நுழைவாயில், வாலிபால் மைதானம், நடைபயிற்சி நடைபாதை ஆகி யவற்றை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளத்தில் மாண வர்கள் ஸ்கேட்டிங் செய்வதை தொடங்கி வைத்தார். பின்னர் விளையாட்டரங்கத்தில் உள்ள “நம்ம தஞ்சாவூர்” என்ற செல்பி பாய்ண்டை யும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் வாலிபால் போட்டியையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து தஞ்சாவூர் கலைஞர் அறி வாலயத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டா லின், மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்என்எம். உபயதுல்லாவின் படத்தை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலு வலர்களுடன், மாவட்டத்தின் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், தஞ்சாவூர் மக்களவை உறுப்பி னர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.