districts

img

சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் : பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

தஞ்சாவூர், மார்ச்.10- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யக் குழுக் கூட்டத்தில், பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்காததால், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு  கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், உறுப்பினர்கள் வராத தால் கூட்டம் தொடங்க காலதாமதம் ஆனது.  கூட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக் கம் (திமுக) தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், திமுக உறுப்பினர் குழ. செ.அருள்நம்பி, அதிமுக உறுப்பி னர்கள் சிவ.மதிவாணன், ப.கருப்பை யா ஆகிய மூவர் மட்டுமே பங்கேற்ற னர். மொத்தமுளள 16 உறுப்பினர்க ளில் 10 திமுக உறுப்பினர்களும், 3 அதி முக உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  இதையடுத்து, போதிய உறுப்பி னர்கள் இல்லாததால், தீர்மானம் நிறை வேற்றப்படாமல், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்ப பட்டது. இதனால் 10 நிமிடங்களில் கூட்டம் நிறைவடைந்தது. இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் கூறு கையில், “கடந்த இரண்டு ஆண்டு களாக சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்திற்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளது. உறுப்பி னர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய போதிய நிதிஆதாரம் இல்லை. இத னால் வாக்களித்த மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தப்பட்டு உறுப் பினர்கள் வரவில்லை” என்றார்.  இதுகுறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தரப்பில் கூறுகையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு இரண்டு ஆண்டுகளாக போதுமான நிதி ஆதாரம் வழங்கப்படவில்லை. ஓரளவு கிடைக்கக் கூடிய நிதியையும், உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும்  வேலைகளை தேர்வு செய்வதிலும் ஒன்றியக்குழு தலைவர் பாரபட்சமாக செயல்படுகிறார். உறுப்பினர்களை கலந்தாலோசிக்கா மல் ஒருதலைப்பட்சமாக செயல் படுவதால் கூட்டத்தை புறக்கணித் தோம்” என்றனர்.