districts

img

மாஸ் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கும்பகோணம், மே 31 - கும்பகோணம் அருகே உள்ள கள்ளப்புலியூர் மாஸ்  கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தை கல்லூரி தாளாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் மாலினி விஜய குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக் குமாரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கருணா நிதி வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி துணை முதல்வர் சர வணன் வரவேற்றார். திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சுபாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார். மாறிவரும் இன்றைய கல்வி சூழ்நிலையில் கல்வி யியல் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் எவ்வாறு சிறந்த  ஆசிரியராக மாறுவது என எடுத்துரைத்தார். பேரா.ஜெயரா மன் நன்றி கூறினார். பல மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.