தஞ்சாவூர், மார்ச் 22- வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறி வித்து மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பாதிப்பை தடுக்க விதிகளை திருத்தி துணை வட்டாட்சியர் பதவி இறக்கத்தை ரத்து செய்து மீண்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில்குமார் தலை மை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.தங்கபிரபா கரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.