districts

செகந்திராபாத்-இராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பட்டுக்கோட்டை, ஜன.4-  தெலுங்கானா மாநிலம் செகந்திரா பாத்தில் இருந்து, சென்னை - எழும்பூர் - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக இராமேஸ்வரத்திற்கு இயங்கி வந்த சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்  07695/07696) ஜனவரி 4 முதல் 25 வரை  மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது  செகந்திராபாத்தில் இருந்து இராமநாத புரம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் பழுது சம்பந்த மான ஆய்வு நடப்பதால் இராமேஸ்வரம் வரை சென்று வந்த விரைவு ரயில் தற்காலி கமாக இராமநாதபுரம் வரை மட்டுமே சென்று திரும்புகிறது. இதற்கான பய ணச்சீட்டு முன்பதிவும் தொடங்கி விட்டது. செகந்திராபாத்-இராமநாதபுரம்-செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண்  (07695) ஜனவரி 4 முதல் 25 வரை செகந்தி ராபாத்தில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, வியாழக் கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.  அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு  வந்தடைந்து, தொடர்ந்து காரைக்குடி  மானா மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு இராம நாதபுரத்தை சென்றடைகிறது. ஜனவரி 6 முதல் 27 வரை மீண்டும் இதே  மார்க்கத்தில், இந்த ரயில் (வண்டி எண்  07696) இராமநாதபுரத்தில் வெள்ளிக் கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.13 மணிக்கு பட்டுக் கோட்டையை வந்தடைகிறது. தொடர்ந்து, சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணிக்கு சென்றடையும். அங்கி ருந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு விரைவு ரயிலை நீட்டிக்க  முயற்சி செய்த, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை வட்ட  ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலை வர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவே கானந்தம், துணைத் தலைவர் கா. லெட்சுமி காந்தன், துணைச் செயலாளர் மு.கலியபெருமாள், பொருளாளர் பி.சுந்த ரராஜுலு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.