தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டத்தில் மே 7 (சனிக்கிழமை) அன்று மூன்றாம் கட்டமாக பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, ‘‘அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே, முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று 207 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கும், இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் 30 அன்று, 472 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வரும் மே 7 அன்று மூன்றாம் கட்டமாக 468 அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளது. எனவே, அரசு தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்’’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.