districts

img

பள்ளி செல்லாக் குழந்தைகள் 25 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கும்பகோணம், ஜன.4- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியத்தில் நாச்சியார்கோவில், திருபுவனம் உள்ளிட்ட கிராம பகுதிகளில்  பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெ டுப்பு பணி நடைபெற்றது மாவட்ட இணை ஆய்வுக் குழு உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லி  தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி யை மேற்கொண்டனர் ஆய்வில், 25 பள்ளி செல்லாக் குழந்தை கள் கண்டறியப்பட்டு, 25 மாணவ-மாண விகளில் நாச்சியார் கோவில் ஆண்கள் அரசு பள்ளியில் 3 மாணவர்களும், நாச்சியார் கோவில் பெண்கள் அரசு பள்ளியில் ஒரு மாணவியும், திருநாகேஸ்வரம் அரசு பள்ளியில் ஒரு மாணவரும், திருபுவனம் அரசு பள்ளியில் ஒரு மாணவனும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு, கல்வியை தொடர வழிவகை செய்யப்பட்டது. மேலும் 5 மாணவர்கள் தொழிற்கல்வி பட்டயப் படிப்பு படிப்பதற்கு உறுதி செய்யப்பட்டது.