districts

img

வீடு வாங்க ரூ.1 லட்சம்: மாவட்ட ஆட்சியர் வழங்கல்

தஞ்சாவூர், டிச.26-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெற்றது.  இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், கல்விக்கடன் உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  454 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரி டம் வழங்கினர்.  தொடர்ந்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்படும் புதிய குடி யிருப்பு வீட்டினை வாங்குவதற்கு, ஒரு பய னாளிக்கு, தன் விருப்ப நிதியில் இருந்து  மாவட்ட ஆட்சித் தலைவர் ரூ.1 லட்சத் திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரி டம், 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது பெற்ற ஆறுமுக சீதாராமன் என்ப வர், மாவட்ட ஆட்சியரிடம், பரிசுத் தொகை யான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழைக் காட்டி வாழ்த்துப் பெற்றார்.

;