districts

img

பள்ளிக் கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்க!

தஞ்சாவூர், ஏப்.11-  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பள்ளிக் கட்டிடம் மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, வட்டார வளர்ச்சி  அலுவலர் மீது எடுக்கப் பட்டுள்ள ஒழுங்கு நட வடிக்கையை ரத்து செய்யக் கோரி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்துக்கு மாவட்  டத் தலைவர் ராஜன் தலை மை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கை.கோவிந்த ராஜன், பொருளாளர் தேசிங்கு மற்றும் நிர்வாகிகள் பங் கேற்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள், ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், தஞ்சா வூர் மாவட்டம் திருவிடை மருதூர் அருகே பருத்திக் குடியில், கடந்த மார்ச் 7 அன்று, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மேற்  கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு  என்ற மாணவன் காயம டைந்தார். இச்சம்பவம் தொடர்பாக, திருவிடைமரு தூர் வட்டார வளர்ச்சி அலு வலர் மீது, மாவட்ட நிர்வா கம் மூலம் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இந்த ஒழுங்கு நட வடிக்கையை திரும்ப பெற வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் பணியிட மாறுதல் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பணியிட மாறுதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்  கங்களை எழுப்பினர்.