தஞ்சாவூர், ஜன.23- செங்கிப்பட்டியில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என பட்டியல் இனமக்கள் சிபிஎம் நிர்வாகிகள் தலைமையில், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத் திலும் சிலர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான இடம் அதிகளவில் உள்ளது. இந்த இடத்தில் குடியிருக்க நிலம் மற்றும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இந்நிலையில், திங்களன்று சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் ஒன்றியத் தலைவர் காமராஜ் மற்றும் செங்கிப்பட்டி பட்டியலின மக்கள் ஆட்சியரிடம், ‘‘ஆதி திராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் தங்களுக்கு குடியிருக்க இட மும், மனைப்பட்டாவும் வழங்க வேண்டும்’’ என கோரி மனு அளித்தனர்.