districts

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து மையத்தை தொடங்க கோரிக்கை

தஞ்சாவூர், செப்.7 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை ரயில் நிலைய, சரக்கு போக்கு வரத்து மையத்தை விரைவில் துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட  ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை  விடுத்துள்ளது.  திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக் குடி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப் பட்டு தற்சமயம் திருவாரூர் - காரைக் குடி சிறப்பு விரைவு பயணிகள் ரயில்,  எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர  சிறப்பு விரைவு ரயில், செகந்திராபாத் -  இராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஆகிய 3 ரயில்கள் இத்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், காரைக்குடியில் இருந்து  சென்னைக்கு இரவு நேர தினசரி விரைவு  ரயில், தாம்பரம் - செங்கோட்டை வாரம்  மும்முறை விரைவு ரயில், சோழன் அதி வேக விரைவு ரயிலுக்கு  இணைப்பு ரயிலாக, காரைக்குடி - மயிலாடுதுறை  விரைவு ரயில் ஆகிய ரயில்களை  இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை  வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில், ரயில்வே போர்டு தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே சென்னை பொது மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  பட்டுக்கோட்டை ரயில் நிலையத் தில் உள்ள சரக்கு முனையத்தை விரை வில் துவக்க வேண்டும் என பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் ஆகி யோர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அம்மனுவில், “மயிலாடுதுறை - திரு வாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த போது,  பட்டுக்கோட்டை ரயில் நிலைய சரக்கு  முனையத்திலிருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும்  தனியார் நெல் கொள்முதல் நிலையங் களில் இருந்து நெல் மற்றும் அரிசி  அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு  வந்தன. வேளாண்மைக்கு தேவையான ரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப் பட்டு, இப்பகுதி மக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வந்தன. அகல ரயில்  பாதை பணிகள் முடிக்கப்பட்ட பிறகு,  தற்சமயம் பட்டுக்கோட்டை ரயில் நிலை யத்தில் உள்ள சரக்கு முனையத்தில் லாரிகள் வந்து செல்லும் வகையில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு பட்டுக் கோட்டை நாடியம்மன் கோவில் சாலை யுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து முனையத்திற்கான அலுவலக கட்டிடப்  பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டு மானப் பணிகளை விரைவில் முடித்து பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தை விரைந்து துவங்கிட கேட்டுக் கொள்கிறோம். இதனால் இப்பகுதியில் விளைகிற நெல் சேதமடையாமல், நாட்டின் பிற பகுதிகளுக்கு உடனுக்குடன் ஏற்றுமதி செய்யப்படவும், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடை யின்றி கிடைத்திடவும், ஜவுளிகள் மற்றும்  கட்டுமானப் பொருட்கள் இறக்குமதி செய்திடவும் தேங்காய் போன்ற வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதி செய்திடவும், இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைத்தி டவும் வாய்ப்பு உள்ளது” என குறிப் பிடப்பட்டுள்ளது.

;