districts

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரில் செல்வவிநாயகபுரம் தொடங்கி, பேருந்து நிலையம் வரை சாலை விரிவாக்கப் பணிகள்  நடைபெற்று வருகின்றன. சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணி  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொ டங்கி, ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் ஓரளவுக்கு வேகம் எடுக்கத்  தொடங்கி உள்ளன.  இதற்காக கடைவீதி, முதன்மைச் சாலை யில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மின்கம் பங்கள், மின் மாற்றிகள் இடமாற்றம் செய்யப் பட்டன. மேலும், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப் பட்டது. தற்போது சாலையின் நடுவே தடுப்புச்  சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து பேராவூரணி நகர வர்த்தக  கழக முன்னாள் தலைவர் ஆர்.பி.ராஜேந்தி ரன் கூறுகையில், “சாலைப் பணிகள் ஓராண்டை நெருங்கும் நிலையில், மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் தேங்கிக் கிடக்கும் மணலால் தூசுப் பறக்கிறது. கடைகளில் அமர்ந்து வியா பாரம் செய்ய முடியாத வகையில் தூசியால்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வியா பாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிராமப்புற பகுதியான பேராவூரணிக்கு சென்டர் மீடியன் தேவை இல்லாத வகையில்,  மிக உயரமான அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள், வாகனங் கள் திரும்புவதற்கு போதிய அளவில் இடை வெளி அமைக்கப்படாமலும், குறிப்பிட்ட  இடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்வ தற்கு சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் சாலையைக் கடப்ப தற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய  நிலை உள்ளது. எனவே, தேவையான இடங்க ளில் பொதுமக்கள் சாலையைக் கடக்க வழி  ஏற்படுத்தி தர வேண்டும். நடைபாதை வசதியை அமைத்து, பணிகளை விரைந்து முடித்து சாலையை அமைத்துத் தர வேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலைப் பணிகள் தொடங்கும் முன்னதாக வியாபாரிகளை கலந்து ஆலோசித்து முடிவு  எடுத்திருக்க வேண்டும். சாலைப்பணிகள் தாமதம் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.