districts

img

அனுமதியின்றி வைக்கப்பட்ட  விளம்பரத் தட்டிகள் அகற்றம்  

பேராவூரணி, ஜன.18-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதன்மைச் சாலை,  சேது சாலை, அறந்தாங்கி சாலை, பட்டுக்கோட்டை சாலை,  ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி யின்றி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விளம்பரத் தட்டிகளால் (பிளக்ஸ் போர்டு) போக்குவரத்துக்கு மிக வும் இடையூறு ஏற்பட்டது. மேலும், விபத்து நிகழும் அபா யமும் இருந்தது.  இதையடுத்து சமூக ஆர்வலர்கள் தஞ்சை ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் மனுக்கள் அனுப்பினர். இந்த நிலையில் ஆட்சியர் உத்தரவின்படி, பேரூராட்சி மண்டல உதவி இயக்குநர் கனகராஜ் அறி வுரையின்படி, பேராவூரணி பேரூராட்சி செயல் அலு வலர் பா.பழனிவேல் தலைமையில், 20 க்கும் மேற்பட்ட பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனு மதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர். மீண்டும் அரசு அனுமதி பெறாமல் சாலை ஓரங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைத்தால், அவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலு வலர் பா.பழனிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.