தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சையில் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வணிகர் சங்கம், லயன்ஸ் சங்கம், மும்மதப் பெரியோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் வரவேற்றார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார், மாநகர துணைத் தலைவர் என்.குருசாமி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் என்.வசந்தி, வணிகர் சங்க நிறுவனத் தலைவர் சீனி வாசன், மற்றும் வணிகர் சங்க, தேநீர் வியாபாரிகள் சங்கம், வசந்தம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், திரளான இஸ்லாமி யர்கள் கலந்து கொண்டனர்.