districts

மரோமா நிறுவனத்தில் பதுக்கி வைத்த 4 தொன்மையான சிலைகள் மீட்பு

கும்பகோணம், செப்.20 - விழுப்புரம் மாவட்டம் ஆரோ வில்லில் அமைந் துள்ள மரோமா நிறுவனத் தில் பழமையான உலோக சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரி வுக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதனைத்தொடர்ந்து மேற்படி விற்பனை நிலை யத்தை சோதனை செய்யக் கோரி கும்பகோணம் கூடு தல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சிலை  திருட்டு தடுப்பு பிரிவு போலீ சாரால் விண்ணப்பித்து முறையான உத்தரவு பெறப் பட்டது. இதையடுத்து, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தர வுப்படி, ஐஜி தினகரன் வழி காட்டுதலின்படி, எஸ்.பி ரவி மேற்பார்வையில், திருச்சி  சிலை திருட்டு தடுப்பு  பிரிவு டிஎஸ்பி கதிரவன்  தலைமையில், இன்ஸ்பெக் டர் இந்திரா, எஸ்.ஐ தண்டாயு தபாணி, எஸ்எஸ்ஐ மதிக் குமார், முதல்நிலை காவலர் கள் ரவிக்குமார், கும்பராஜா,  பிரசன்னா மற்றும் லெனின் ஆகியோர் அடங்கிய சிறப்பு  தனிப்படை அமைக்கப் பட்டு, அந்த நிறுவனத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட் டது. இதில், பார்ப்பதற்கு தொன்மையாக காட்சி யளித்த சுமார் 78 சென்டி மீட்டர் உயரம் கொண்ட சிவகாமி அம்மன் உலோக சிலை, சுமார் 45 சென்டி மீட்டர்  உயரம் கொண்ட ஆஞ்சநே யர் கற்சிலை, சுமார் 30 சென்டி மீட்டர் உயரம் கொண்ட நாகதேவதை கற் சிலை மற்றும் சுமார் 38 சென்டி மீட்டர் உயரம் கொண்ட  இடது பக்கம் உடைந்த நிலை யில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை உள்ளிட்ட 4 சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டன.  இச்சிலைகள் தொடர் பாக உரிமையாளரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இதுகுறித்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப் பட்ட சிலைகள் கும்பகோ ணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன. இந்த சிலைகளின் தொன் மைத் தன்மை குறித்தும், இவைகள் தமிழகத்தின் ஏதே னும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதா என்பது பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது.

;