தஞ்சாவூர், ஏப்.10- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற் கிணங்க சமரச நாள் விழா ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா திங்கள்கிழமை தஞ்சை நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் ஒருங் கிணைப்பாளர் தங்கமணி வரவேற்றார். தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கி ணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதி பதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்து விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். விழாவில் தஞ்சை மாவட்ட சமரச மையத் தின் தலைவர் இந்திராணி, வழக்குரைஞர் ராஜேஸ்வரன், தஞ்சை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமரச நாளையொட்டி ஏப்ரல் 11 அன்று சாஸ்த்ரா பல் கலைக்கழகத்தில் சட்ட மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற சமரசகர்களால் சமரச விழிப்புணர்வு குறித்த கருத் தரங்கம் நடத்தப்படுகிறது. மேலும் ஏப்ரல் 12 அன்று சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெறுகிறது.
கரூர்
கரூர் மாநகராட்சி பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினமாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நிதிபதி ஆர்.சண்முக சுந்தரம் துவங்கி வைத்தார். நிகழ்வில், கரூர் மகிளா விரைவு நீதி மன்ற அமர்வு நீதிபதி நசீமா பானு, தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம் முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட சமரச மைய செய லாளர் பாக்கியம், முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிபதி மகேந்திர வர்மா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி உமா மகேஸ் வரி, நீதித்துறை நடுவர் எண் 1 அம்பிகா, விரைவு நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நித்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.