தஞ்சாவூர், ஜன.11- பொங்கல் பரிசுத் தொகுப்பில் விநியோகம் செய்ய, அரசு சார்பில், ஆறு அடி உயரமுள்ள கரும்பு களை மட்டுமே கொள்முதல் செய்த நிலையில், மீதமுள்ள கரும்புகளை விற்க முடியா மல், விவசாயிகள் தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரக்கோட்டை, திருக் காட்டுப்பள்ளி, திருவை யாறு, காட்டூர் ஆகிய பகுதி களில் சுமார் ஆயிரக்கணக் கான ஏக்கரில் கரும்பு சாகு படி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், விவசாயி கள் கரும்புகளை அறுவடை செய்யும் பணிகளில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பொங் கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், அரசு அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று கரும்பை கொள் முதல் செய்தனர். குறிப்பாக, 6 அடி உயரமுள்ள தோகை யுடன் கூடிய கரும்பை மட் டுமே அதிகாரிகள் கொள் முதல் செய்தனர். இதனால், ஒரு வயலில் முழுமையாக கரும்பை கொள்முதல் செய்யாமல், தேவைக்கு ஏற்ப மட்டுமே கொள்முதல் செய்ததால், மீதமுள்ள கரும்பை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்ப தாலும், வாங்க மறுப்பதா லும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், “எங்களி டம் வியாபாரிகள் வயல் களுக்கு வந்து கரும்புகளை தரம் பார்த்து, ஒரு கட்டு 200 ரூபாய் வரை வாங்கி செல் வார்கள். அரசு பொங்கல் தொகுப்பிற்கு கரும்பை கொள்முதல் செய்வதாக அறிவித்த நிலையில், விவ சாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தோம். ஆனால், ஆறு அடிக்கு மேல் உள்ள கரும்பு களை மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். இத னால் பெரும்பாலான வயல் களில் கரும்புகள் தேங்கி உள்ளன. சில இடங்களில், ஆறு அடிக்கு மேல் உள்ள கரும்பு வெட்டப்பட்ட நிலை யில், மீதமுள்ள கரும்புகளை வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்” என்றனர்.