தஞ்சாவூர், மார்ச்.15-- “கண்டிதம்பட்டு கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள த உச்சி மாஞ்சோலை, சொக் கொல்லை, விளார், பூக்காரத் தெரு கிராமங்களுக்கு ஒரே ஒரு அரசுப் பேருந்து (எண்.54) மட்டுமே இயக்கப்பட்டு வரு கிறது. தினமும் காலை ஏழு மணி க்கு கண்டிதம்பட்டுவில் இருந்து தஞ்சைக்கும், மறு மார்க்கமாக மாலை ஐந்து மணிக்கு தஞ்சை யில் இருந்து கண்டிதம்பட்டுக்கும் இயக்கப்படுகிறது. ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், மக்கள் மிகுந்த அவதிக்கு உள் ளாகி வருகின்றனர். பல நேரங்க ளில் படிக்கட்டில் தொங்கியபடி பய ணம் செய்யும் நிலை உள்ளது. பேருந்து பழுது ஏற்பட்டால் அன்றைய தினம் முற்றிலும் பேருந்துச் சேவை கிடையாது. மாணவர்கள், மக்கள் நலன் கருதி கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நிலையூர் ஊராட்சியில் நடை பெற்ற மருத்துவ முகாமில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவப் பெட்டகத்தை சட்ட மன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்வில் அரசு அலு வலர்கள், மனமேல்குடி ஊராட்சி ஒன்றிய துனைத்தலைவர் சீனி யார். நிசரவணன் வீராச்சாமி முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.