districts

பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பலாம்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அறிவிப்பு

தஞ்சாவூர், செப்.18 - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2021-2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு,  தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவ தென முடிவு செய்துள்ளது.  இதனையொட்டி, தஞ்சை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப் பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவ னங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச் சனைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதா ரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலை வர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை - 600009 என்ற முக வரிக்கு 2022 அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில்  இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு  அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்த தாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே யொரு பிரச்சனையை உள்ளடக்கியதாக வும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாக வும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது  முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை  உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆனால் மனுவில் உள்ள பொருள், தனி நபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கி லுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர்  ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன்  அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவ லர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவையாக இருக்கக் கூடாது.  சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற் குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.

ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், முக்கியத் துவம் வாய்ந்ததாக குழு கருதும் ஒரு மனு  மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அப்போது மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறி யப்படும்.  இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு  செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப் படும். அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பின்னர்  பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

;