தஞ்சாவூர், அக்.27- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் ஓலை யக்குன்னம் கிராமத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் வை.சிதம்பரம் மகன்கள் வைத்தி காஸ்ட்ரோ, விஜய் காஸ்ட்ரோ இருவரும் இணைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில அலுவலக கட்டட நிதியாக ரூ.10 ஆயிரத்தை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வியிடம் வழங்கினர். இதேபோல், அதே பகுதி யைச் சேர்ந்த வழக்கு ரைஞர் எம்.வீராச்சாமி கட்டட நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். அப்போது, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் உடனிருந்தார்.