தஞ்சாவூர், டிச.30- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணிக்காக கையகப் படுத்தப்பட்டுள்ள பட்டா நிலங்களைப் போலவே, கோயில், சத்திரம் போன்ற நிலங்களின் குத்தகை விவசாயிகளுக் கும் மரம், பம்பு செட்டுகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். 1969 ஆம் ஆண்டு சட்டப்படி அல்லா மல் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்தும் சட்டப்படி நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக கோயில் அடி மனைகளில் வீடுகள், சிறுகடை கள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை ஆக்கிரமிப்பாளர் எனக் கூறி வெளி யேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காலங்காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங் களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருவையாறு காம ராஜர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், துணைத் தலைவர் கதிரவன், மாவட்ட பொருளாளர் எம். பழனி அய்யா, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.