districts

img

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தஞ்சையில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், மார்ச் 13 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஞாயிறன்று 2022 - 2023-ம் ஆண்டுக் கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயா ரிப்பது தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை,  மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து  வரவேற்றார்.  கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், “இயற்கை விவசாயத்துக்கு ஊக்கப்படுத்த மானியம் வழங்க வேண்டும். இதனை கண்கா ணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும். பாரம் பரிய நெல், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தனித்துறை வேண்டும். பரப்பளவு நிறைந்த டெல்டாவில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் முறை யாக கண்டறிந்து தூர்வார வேண்டும். பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு ஏதே னும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதுகுறித்து தெரி விக்க மண்டல அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். வெற்றிலை சாகுபடிக்கு தேவையான விதை களை வேளாண் துறை வழங்க வேண்டும். டெல்டாவில் வேளாண் சார்ந்த தொழில்களை கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக  அரசே ஏற்று நடத்த வேண்டும்” என பல்வேறு கோ ரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம்.  

கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 54 லட்சம்  ஏக்கராக அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்த தால், நெல்லை பாதுகாப்பதில் மிகப்பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றான மாற்று பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்ல  வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி  செய்யப்பட்ட நெல்லை, விற்பனை செய்யும் இயக் கமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்று, தற்போது கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997  கிராமங்களில் அனைத்து திட்டங்களும் செயல் படுத்தப்படும்.  இதன் மூலம் 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் இக்கிராமங்கள் முழுமை பெறும். அப்போது தமிழகத்தில் பசுமை புரட்சி ஏற்படும். இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டும்  என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் மூன்று ஆண்டு களில் வேளாண் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். விவசாயிகளின் கருத்துகள் அனைத்தும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை யில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு முதன்முறையாக வேளாண் மைக்கு தனி நிதிநிலை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றது.

அப்போது  கருவாக இருந்த வேளாண் நிதி நிலை அறிக்கை, தற்போது 6 மாத குழந்தையாக வளர்ந்துள்ளது.  இதன் மூலம் 128 அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தற்போது நமது மாநிலத்தில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், மண் மலட்டுத் தன்மையாக மாறிவிட்டது. எனவே மண்ணை வளப்படுத்த தனியாக திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு இயற்கை விவசாயத்தையும், தேனீ வளர்ப்பையும் ஊக்கு விக்கவுள்ளோம்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது. நெல் சாகு படிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது. இயற்கை  விவசாயத்துக்கும் இந்த நிதிநிலை அறிக்கை யில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருக்கும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இது வரை விவசாயிகளை காணொளி மூலம் தொடர்பு  கொண்டு அவர்களது கருத்துகளை கேட்டுள்ளோம்.  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமையும் என்றார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழி யன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் செயலர் சி.சமயமூர்த்தி, வேளாண் துறை  இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர்  எஸ்.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தாதேவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி  

இதில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி சர்க்கரை ஆலை நிர்வாகச் சீர்கேடு காரணமாக பூட்டப்பட்டுள்ளது. இதே போல் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையும் பூட்டப்பட்டுள்ளது. எனவே, இரண்டையும் உடனடியாக திறப்பதற்கு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க வலியுறுத்தி 40 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. வேளாண் துறை அமைச்சரிடம் இதுகுறித்து நேரடியாக பேசி யும், இதுவரை திறக்கப்படாத நிலை உள்ளது. எனவே, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அதனை  திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு சர்க்கரை ஆலைகளையும் திறப்பதற்கு  தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை அமைச்சர் இதுகுறித்த  அறிவிப்பை, வேளாண் துறை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும்.  கலைஞர் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப் பட்டு, தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கீழ் வேளூர் வேளாண் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனது கோரிக் கையை ஏற்று வேளாண் கல்லூரி துவங்கிட நட வடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோருக்கு எனது சார்பி லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.