தஞ்சாவூர், மார்ச்.12 - திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனி பகுதியைச் சேர்ந்த ர.பிரவீன் (25). மீது திருவாரூர் காவல் நிலை யத்தில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரவீன் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் சனிக்கிழமை இரவு, மனோரா அருகே நாடியம் சாலையில் பிரவீனை பிடித்தனர். அவரை வாக னத்தில் ஏற்ற முயன்றபோது பிரவீன் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ வை(53) வெட்டியுள்ளார். இதில் அவ ருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் பிரவீன் அங்கிருந்த காவல் துறையினரை தாக்க முயன்ற போது ஆய்வாளர் ராஜேஷ் துப்பாக்கியால் பிரவீன் இடது முழங்காலுக்கு கீழ் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த ரவுடி பிரவீன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வா ளர் இளங்கோ ஆகிய இருவரையும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் (திருவாரூர்) , ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்) ஆகியோர் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவை சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்த ரவுடி பிரவீனை பலத்த காவல்துறை பாதுகாப்போடு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர் என்கிறது காவல்துறை வட்டாரம். திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்த வர் ராஜ்குமார்(34). இவர் வளரும் தமி ழகம் கட்சியின் மாவட்டச் செயலா ளராக இருந்தார். இவர் கடந்த 10-ஆம் தேதி நடேச தமிழார்வனின் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்று விட்டு திருவாரூர் கமலாபுரம் அருகே காரில் வந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சனிக் கிழமை ஆறு பேரைக் கைது செய்தனர். இந்தக் கொலை சம்பவத்திலும் பிர வீனுக்கு தொடர்புள்ளது என்கிறது காவல்துறை.