districts

img

பேராவூரணி குமரப்பா பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், ஜூன் 24 -  பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளி யாயின. இதில் பேராவூரணி டாக்டர். ஜே.சி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 154 பேர் தேர்வெழுதினர். இதில் 151  பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 98 சதவீதம் ஆகும்.  600 மதிப்பெண்களுக்கு 581 மதிப்பெண் பெற்ற மாணவி  ரிஷிவா முதலிடமும், 579 மதிப்பெண் பெற்ற மாணவி கீர்த்திகா  இரண்டாமிடமும், 578 மதிப்பெண் பெற்ற மாணவர் அருள்குமரன் மூன்றாமிடமும் பெற்றனர். தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம்  159 பேர் எழுதினர். இதில் 158 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி  சதவீதம் 99 ஆகும். 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண் பெற்று மாணவி அமிர்தா முதலிடமும், 483 மதிப்பெண் பெற்ற  மாணவர் நிதிஸ்குமார் இரண்டாமிடமும், 480 மதிப்பெண் பெற்ற மாணவர் சுகேஷ் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு தனியார்  பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாண வர்களையும் அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் வாழ்த்தினர்.

;