districts

பட்டுக்கோட்டை: தாய், குழந்தை விஷம் அருந்தி தற்கொலை

தஞ்சாவூர், அக்.6- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே ஆலடிக்குமுளை புதுநகரைச் சேர்ந்தவர் ஜான்ராஜ். கூலித் தொழிலாளி. இவரும் அதே பகு தியைச் சேர்ந்த மாலதி(22) இருவரும் காதலித்து கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன் திருமணம் செய்து கொண்  டனர். இவர்களுக்கு தர்ஷன்(2) என்ற  மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஜான்ராஜ் கூலி வேலைக்கு செல்லா மல், வீட்டில் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்  லாத நிலையில், மாலதி மகளிர் சுய உத விக் குழு மூலம் தனியார் நிதி நிறுவனத்  தில் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி  வந்துள்ளார். இதையடுத்து போதிய வருமானம்  இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி, நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை  காலதாமதமாக செலுத்தி வந்துள் ளார். இதனால் ஜான்ராஜூக்கும், மால திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழனன்று காலை கணவன், மனைவியிடையே மீண்டும் நிதி நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த மாலதி,  வீட்டில் இருந்த தென்னை மரத்துக்கு வைக்கும் குருணை மருந்தை தனது  மகனுக்கு கொடுத்துவிட்டு,  அவரும் சாப்பிட்டு உள்ளார். இதில், 2 வயது  குழந்தை தர்ஷன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  மாலதி வேதனை தாங்காமல் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழி யிலேயே மாலதி உயிரிழந்தார். இதுகுறித்து மாலதியின் தந்தை மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;