districts

பாபநாசம் எம்எல்ஏ மே தின வாழ்த்து

பாபநாசம், ஏப்.30 - மனித நேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், உழைப்பாளிகளின் பெரு மையை உலகிற்கு உணர்த் தும் உன்னதத் திருநாளாம் மே தினத்தில் தொழிலாளர் சமுதாயத்திற்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இதயம்  கனிந்த மே தின வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உழைப்புக்கேற்ற ஊதி யம், எட்டு மணி நேர வேலை  போன்றவற்றை முன்வைத்து எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்.  தொழிலாளர்களின் உழைப்பு திறன்தான் உலகத் தின் மூலதனம் என்பதனை பறைசாற்றிய நன்னாள் 1886-ல் தொடங்கி 136  ஆண்டுகளாக மே தினம் உணர்வுப் பூர்வமாக உலக மெங்கும் கொண்டாடப்படு கிறது. உழைப்பாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட நாம் உறுதி எடுத்துக் கொள் வோம் என கூறியுள்ளார்.

;