தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக, முதன்மைச் சாலை, பேரூராட்சி திருமண மண்டபம் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமார் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழக்கீற்று, நீர்மோர், பானகம் ஆகிய வற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் ஒன்றி யச் செயலாளர் என்.எஸ். சேகர், பேரூராட்சித் துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேலு, பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் அன்பர சன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.