தஞ்சாவூர், டிச.25 - கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கைத் தறி ரகங்களுக்கும் 30 விழுக் காடு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருவதாக கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலா ளர் அம்சவேணி தெரி வித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், தஞ்சை மண்டல கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 2022 கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையில் ரூ.384.10 லட்சம் அளவிற்கு சில்லரை விற்பனை நடை பெற்றுள்ளது. 2023 கிறிஸ் துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு இலக்கு ரூ.11 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் நிறு வனம் மாறி வரும் காலத்திற் கேற்ப வாடிக்கையாளர் களின் ரசனை அறிந்து கைத் தறி ரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபு வனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், தலை யணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டு உள்ளன. மேலும், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கனவு நனவு அறிமுகப்படுத் தப்பட்டு 2021-2022 ஆம் ஆண்டில் 1500 வாடிக்கை யாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ள னர். இத்திட்டத்தின்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தா தொகையை கோ ஆப் டெக்ஸ் போனஸாக வழங்கி மொத்த முதிர்வு தொகைக்கு 30 விழுக்காடு அரசு தள்ளு படியுடன் துணிகள் வழங்கப் பட்டு வருகிறது என தெரி வித்துள்ளார்.