districts

img

அகவிலைப்படி நிலுவையை வழங்குக! ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 22 -  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 4 ஆவது தஞ்சாவூர் மாவட்ட  மாநாடு, வியாழக்கிழமை திருக்காட்டுப் பள்ளி மாலா மஹாலில் நடைபெற்றது.  இதையொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஓய்வூதியர்கள் உரிமைப் பேரணி வட்டப் பொருளாளர் எஸ்.பெருமாள் தலை மையில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராசு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பூதலூர் வட்டச் செய லாளர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தொடக்கவுரையாற்றினார்.  தொடர்ந்து ஓய்வூதியர் இதழுக்கு அதிக சந்தா சேர்த்தவர்களுக்கு நினைவுப் பரிசும்  வழங்கப்பட்டது.  ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கியுள்ளது போல, தமிழக அரசும் ஓய்வூதியர்களுக்கு ஜனவரி 2022 முதல் 3  விழுக்காடு அகவிலைப்படியை முன்தேதி யிட்டு ரொக்கமாக உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களது மஸ்டரிங் வேலையை 20 விழுக்காடு மட்டுமே அரசு  கருவூலம் செய்வது என்பதும், மீதி 80 விழுக் காட்டை அஞ்சல் துறை மற்றும் தன்னார்வ நிறு வனங்கள், சேவை நிறுவனங்களிடம் விட்டு விடுவது ஆள் குறைப்பு நடவடிக்கையே. எனவே, மஸ்டரிங் முறை முழுவதையும் கரு வூலமே எடுத்துச் செய்ய வேண்டும்.  தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு, 70 வயது நிறைவுற்ற ஓய்வூ தியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதி யம் வழங்கிட வேண்டும். திருக்காட்டுப் பள்ளி பழமாநேரி சாலையில் நான்கு ரோடு  சந்திப்பில், ரவுண்டானா அமைத்து தர  வேண்டும். பூதலூரில் சார்நிலைக் கருவூலம்  அமைத்து தர வேண்டும்.

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்பப்  பாதுகாப்பு நிதி ரூபாய் ஒரு லட்சம் வழங்கிட  வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தவுடன் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ரூ. 25  ஆயிரத்தை அன்றே வழங்கவும், அதனை  குடும்பப் பாதுகாப்பு நிதியில் ஈடு செய்யவும் உரிய அரசாணை வழங்க வேண்டும்.  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர  வேண்டும். சத்துணவு ஓய்வூதியர், அங்கன்வாடி ஓய்வூதியர், கிராம உதவியா ளர் உள்ளிட்ட அனைத்து அரசு பணி  செய்தோருக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம்  ரூ.8,750 உத்தரவாதப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை ஓய்வூதியத் தொகையை உடன டியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி அடையாள அட்டை  மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். ரயில் பயணங்களில் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்கள்  அனைவருக்கும் கட்டணச் சலுகை, இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஆர். கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளராக ஆர்.தமிழ்மணி, மாவட்டப் பொருளாளராக எஸ்.கோவிந்தராஜ், மாவட்டத் துணைத்  தலைவர்களாக ஜி.பூபதி, பழ.அன்புமணி,  பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் களாக எஸ்.பாலசுப்பிரமணியன், ஏ.வெங்க டேசன், சி.பிச்சைமுத்து, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், தணிக்கையாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநிலச் செயலாளர் இரா.மனோகரன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் பி.தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.

;