தஞ்சாவூர், ஜூன் 8- மதுபானக் கடையில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் சிஐடியு தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடி மூப்பனார் சாலை யிலுள்ள, டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் சிஐடியு தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கப் பொருளாளர் ஏ.ஜி.பன்னீர்செல்வத் திடம், சட்ட விரோதமாக மதுக்கூடம் நடத்தும் சிலர் மதுபானம், பாட்டில்கள் கேட்டு அண்மை யில் தகராறு செய்து அவரை தாக்கினர். தாக்கு தல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக பன்னீர் செல்வம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை மிரட்டி, எதிர் தரப்பின ருக்கு ஆதரவாக செயல்பட்ட கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரெங்க நாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக மதுக்கூடம் நடத்துபவர்களுக்குக் காவல்துறை துணை போகக் கூடாது. மாவட்டத்தில் இயங்கும் அனுமதி பெற்ற மதுக்கூடப் பட்டி யலை வெளியிட வேண்டும். அனுமதி பெறா மல் சட்ட விரோதமாக மதுக்கூடம் நடத்து பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரை யாற்றினார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர் பிரபு, டாஸ்மாக் ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் கே. வீரய்யன், மாவட்டத் தலைவர் கே.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.