தஞ்சாவூர், ஏப்.13 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நிவர்த்தி செய்திடும் வகையில், மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலராக ர.கலைவாணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கோரிக்கை கள், குறைகள் மற்றும் புகார் தொடர்பாக ர.கலைவாணி, குறைதீர்க்கும் அலுவலர், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி சாலை, தஞ்சா வூர். இலவச தொலைபேசி எண்: 18004252187 மற்றும் ombudsnregsthanjavur@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொண்டு உரிய தீர்வு பெற்றிடலாம் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.