தஞ்சாவூர், டிச.20- தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான சீனியர் என்ற எலைட் பிரிவில் 19 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 200-க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 81 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களுக்கான போட்டி யில் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவி குணவர்தினி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். இவர் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 70 முதல் 75 கிலோ எடை பிரி வில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல் லூரி மாணவி பிரீத்தி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர்களையும் பயிற்சி அளித்த தஞ்சை மாவட்ட குத்து சண்டைக் கழக பொதுச் செய லாளர் ஜலேந்திரனையும், மாவட்ட விளை யாட்டு அலுவலர் டேவிட், குத்து சண்டைக் கழக மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, துணை தலைவர் சிவா ஆகியோர் பாராட்டி னர்.