districts

அலட்சியத்தில் நாச்சியார்கோவில் அஞ்சலகம்: மக்களை அலைக்கழிக்கும் வாடிக்கையாளர் சேவை

கும்பகோணம், டிச.5- கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்  கோவில் 612 602 அஞ்சலகத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் அஞ்சலக சேவை நாச்சியார்கோயில் அஞ்சலக போஸ்ட்மேன் கட்டுப்பாட்டில் இயங்கு கிறது.  தமிழக தலைமை கொறடா கோவி. செழியன், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெண் குழந்தை களுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் தனது  சொந்த நிதியிலிருந்து கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு பெற்றோர் தகுந்த ஆவணங்களை கொடுத்து கணக்கு தொடங்கி வருகின்றனர். இந்நிலையில், சிலருக்கு ஆதார் பதிவு இல்லாமலும் ஆதாரில் திருத்தம் மற்றும் தொலைபேசி எண் பதிவு இல்லாமலும் இருக்கிறது. இதனால் செல்வமகள் திட்டத் தில் சேர முடியாமல் பலர் தவித்து வருகின்ற னர்.  ஆனால், நாச்சியார் கோவில் அஞ்சல கத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தத்திற்கு சேவை இல்லாமல் பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுகிறார்கள். மேலும் செல்வமகள் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தொகை செலுத்த வரும் வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தும் போக்கு நீடித்து வருவ தாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நாச்சியார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமா சங்கர் மற்றும் உறுப்பினர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் தற்காலிகமாக இரண்டு நாள் முகாம் நடைபெற்றது.  எனவே, பொதுமக்கள் பயனடைய ஆதார் சேவை நாச்சியார் கோயில் அஞ்சல கத்தில் நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.