districts

மாதாந்திர உதவித்தொகை நிறுத்தம் சிபிஎம், மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தஞ்சாவூர், அக்.26 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தஞ்சை ஒன்றியம் ஆலக்குடி கிளைக் கூட்டம் ஆர்.எத்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சங்கிலிமுத்து, கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தோழர் பி.ஆர். நினைவு கட்டட நிதியாக ரூ.800 வழங்கப்பட்டது.  முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு, கடந்த 7 மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகை சில நபர்களுக்கு நிறுத்தப்பட்டதை கண்டித்தும், தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.