தஞ்சாவூர், அக்.30- தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தஞ்சை மாவட்ட 4 ஆவது மாநாடு, ஆற்றுப்பாலம் சரோஜினி நினைவகத்தில், ஞாயிறன்று மாவட்டத் தலைவர் கே. அபி மன்னன் தலைமையில் நடை பெற்றது. மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன் வரவேற்றார். மாநி லக்குழு உறுப்பினர் என்.சிவகுரு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் அமைப்பை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ப.சத்தியநாதன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக கே.பன்னீர்செல்வம், செயலா ளராக என்.சிவகுரு, பொருளாள ராக ப.சத்தியநாதன் உள்ளிட்ட 38 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில், சிஐடியு தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் சா.விவே கானந்தன், நீலப்புலிகள் இயக்கம் தலைவர் ஆ.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.வசந்தி, விடுதலை தமிழ்ப் புலி கள் கட்சி மாவட்டச் செயலாளர் சா.போராளி, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து வைத்தும், புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுறையாற்றினார்.
மாநகரப் பொருளாளர் கே.ரெங்கநாதன் நன்றி கூறினார். மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலை யைத் தடுக்க சட்டமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தஞ்சை மாவட்டத்தில், மாநக ராட்சி, நகராட்சியில் பொது சுடு காடு உள்ளதைப் போல், பேரூ ராட்சி, ஊராட்சிகளில் சமத்துவ புரம் இருப்பது போல், பொது சுடுகாடு ஏற்படுத்த வேண்டும். தஞ்சை மாநகராட்சியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருக்கு முழு உருவச் சிலை அமைத்திட வேண்டும். கிராம ஊராட்சி தலைவருக்கு, தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வரும்பொழுது, ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை அரசு நிர்வாகம் தடுத்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சியில் மலக்குழிக்குள் மனிதர்களை இறக்காமல், நவீன இயந்திரங்க ளை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும். கல்வி நிலையத்தில் நடைபெறும் சாதிய பாகுபாட்டை களைய கல்வி மாவட்ட அளவில் குழு ஏற்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன் கொடுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தடுத்திட மாவட்டத்தில் செயல்படும் கமிட்டி யில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி க்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். தஞ்சை, கும்பகோணம் மாநக ராட்சி பட்டுக்கோட்டை நகராட்சி யில் வசிக்கும் தலித் மக்களை நக ரத்திற்கு வெளியே தமிழக அரசு அப்புறப்படுத்த கூடாது. நகருக் குள்ளேயே அடுக்குமாடி குடி யிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நூல் வெளியீடு
மாநாட்டில் ஒன்றுபட்ட கீழத் தஞ்சையின், செங்கொடி இயக்கத் தின் ஒப்பற்ற தலைவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து, தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய, ‘‘ஒரு பண்ணை அடி மையின் விடுதலைப் போராட்டம்’’ என்ற நூலை, தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி அறிமுகம் செய்திட, முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் வெளியிட்டார். சிபிஎம் மூத்த தோழர் என்.சீனிவாசன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே. சந்துரு ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய, பழங்குடி மக்களின் அறப் போராளி ஸ்டேன் சுவாமி போராட்ட வரலாறு குறித்த நூலினை, தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் நூல் அறிமுகம் செய்திட, சாதிய ஆணவப் படுகொலையால் தனது கணவனை இழந்து, நீதிக்கான உறுதிமிக்க போராளியாக களம் காணும் போராளி அபிராமி வெளியிட, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெய பால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.