districts

தஞ்சையில் குளிர்சாதன வசதியுடன் நவீன மீன் சந்தை மேயர் சண்.ராமநாதன் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 15-  தஞ்சாவூரில் குளிர்சாதன வசதியு டன் நவீன மீன் சந்தை அமைக்கப்படும் என மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.  தஞ்சாவூர் மேயராக பதவியேற்று 100 ஆவது நாளையொட்டி செவ்வாய்க் கிழமை, மாநகராட்சி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிய அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஏற்கெ னவே ஒரு குடிநீர் திட்டம் இருக்கிறது. பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இரண்டாவது திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளது. மேலும், மூன்றாவது திட்டம் நிறை வடையும்போது, அடுத்த 30 ஆண்டு களுக்கு தஞ்சாவூர் மாநகரில் குடிநீர் பிரச்சனை இருக்காது. மாநகரில் 10 இடங்களில் நுண்  உரமாக்கல் மையங்கள் அமைக்கப் பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டு வரப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் 50  டன் மக்கும் குப்பைகள் இயற்கை உர மாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படுகிறது. ஜெபமாலைபுரம் உரக்கிடங் கில் மலை போல தேங்கியுள்ள குப்பை களை அகற்றும் பயோ மைனிங் திட்டம் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்.  இந்த இடத்தை தூய்மைப்படுத்திய பிறகு ரூ.190 கோடி மதிப்பில் தூய்மை  பணியாளர்களுக்கான 1,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டித் தர  அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப் பட்டுள்ளன. மாநகரில் கூட்டுறவு காலனி பகுதியில் புதிதாக ஒரு நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ‘நம்ம வார்டு நம்ம மேயர்’ திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. முதல் கட்ட சுற்றுப்பயணத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ. 20  கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. நான்கு ராஜ வீதிகளிலும் சாக்கடை கட்டி, சாலை அமைக்கும் பணி 2 மாதங்களில் நிறைவடையும். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்கப் படும்.  சில திட்டங்களுக்கு இந்திய தொல்லி யல் துறையிடமிருந்து அனுமதி கிடைப் பதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகளும் தாமதமாக நடைபெறுகின்றன. சிவ கங்கை பூங்காவில் நடைபெறும் சீர மைப்புப் பணி வருகிற டிசம்பர் மாதத் துக்குள் முடிக்கப்படும்.

4 மீன் சந்தைகள் அமைக்க திட்டம்
காமராஜர் சந்தையில் மின் இணைப்பு கிடைத்தவுடன் கடைகள் ஏலம் விடப்படும். மீன் சந்தை புதிதாக குளிர்சாதன வசதியுடன் நவீன முறை யில் கட்டப்படவுள்ளது. மேலும், 4 கோட்டங்களிலும் 4 மீன் சந்தைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. மாநக ரில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி ஒன்றரை மாதத்தில் நிறைவடையும்.

விரைவில் ஆம்புலன்ஸ் சேவை
தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக தஞ்சாவூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை விரை வில் தொடங்கப்படவுள்ளது. முதல் கட்ட மாக 3 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும்.  மருத்துவமனையில் மரணமடை பவர்களை வீட்டுக்குக் கொண்டு செல்லும் விதமாக இரு அமரர் ஊர்திகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் ஆம்புலன்ஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்

;