தஞ்சாவூர், ஜன. 31 - பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் திங்களன்று தாமாக முன்வந்து தங்க ளது விசாரணையை தொடங்கினர். ஆணையத்தின் தலைவர் பிரி யங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர், திங்கட்கிழமை தஞ்சா வூர் ரயில் நிலைய விருந்தினர் இல்லத் தில் விசாரணையை தொடங்கினர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, வல்லம் டிஎஸ்பி ஆர்.பிருந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக் குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத் துவ சிகிச்சை அளித்த மருத்துவர் கள் ஹேமா அகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், அஞ்சை, உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் உதயபானு, அருள்மதி கண்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவ லர் திலகவதி, மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராம மக்கள், முன்னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளி யில் படித்து வரும் மாணவிகள், மாணவியின் தாய் வழி தாத்தா - பாட்டி, சமூக ஆர்வலர்கள் பியூஸ்மா னூஸ், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி தங்களது கருத்துகளை ஆணையத்திடம் தெரிவித்தனர்.
காலை 8.30 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடைபெற்றது. ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், பதில்களையும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா ஒருங்கிணைத்தார். பின்னர் ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்று, பள்ளியின் அங்கீகார ஆவ ணங்கள், காப்பகத்தின் ஆவணங் களை சரிபார்த்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவி கள், காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மைக் கேல்பட்டியில் சுமார் 1.30 நேரம் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்
வழக்கறிஞர் ஜீவக்குமார் பேட்டி
பின்னர் வழக்குரைஞர் வெ. ஜீவகுமார் அளித்த பேட்டியில், ஏற்க னவே, தமிழக குழந்தைகள் ஆணை யம் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விசாரித்து வருகிறது. மாநில அரசின் குழந்தைகள் ஆணையம் விசாரிக்கும் போது, மத்திய அரசின், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தேவை யா?. இறந்த மாணவி தாயின் அன்பில் வளரவில்லை. அம்மாண விக்கு மாற்றாந்தாய் சூடு வைத்தது போன்ற பல தகவல்கள் வெளியாகி யுள்ளன. எனவே, மாற்றாந்தாயால், அந்த மாணவி கொடுமைப்படுத்தப் பட்டுள்ளாரா என விசாரிக்க வேண்டும். திருமனூர் காவல்நிலையத்தில் முதல் முறையாக புகார் அளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமனூர் புகார் தொடர்பாக எந்த விசாரணையும் வெளியில் காட்டப்பட வில்லை. எனவே புதிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணை ரகசிய மாக இல்லாமல், வெளிப்படை தன்மை யுடன் நடத்தப்பட வேண்டும். பிரிவு 14 சிபிசி படி, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பிரிவு 13/2 படியும் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம். இறந்த மாணவியின் தாய், மாணவிக்கு ஏழு வயது இருக்கும் இறந்துள்ளார். மாணவிக்கு சூடு போடப்பட்டுள்ளது. அது எப்படி சூடு போடப்பட்டது. மாணவியின் உடலில் இயற்கை யான தோல் சம்மந்தமான நோய்கள் இருந்துள்ளது. மாணவி வீட்டுக்கு போனால், அவருக்கு தனி படுக்கை, தனி சாப்பாடு என்பதால், விடுமுறை யில் கூட வீட்டிற்கு போக மனமில்லா மல் விடுதியில் இருந்துள்ளார். உடன் பிறந்த தம்பிகளுடன் இருக்க முடியவில்லை. இதனால் அந்த மாண விக்கு இயற்கையான மனித வாழ்க்கை மறுக்கப்பட்டுள்ளது. மாற்றாந்தாய் கொடுமைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்றார்.