districts

img

தஞ்சாவூர் மாநகராட்சியில்  ஆய்வுப்பணியை தொடங்கிய மேயர்

தஞ்சாவூர், ஏப்.7- தஞ்சாவூர் மாநகராட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பணியை மேயர் சண்.ராமநாதன் புதன்கிழமை தொடங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சியின் மார்ச் மாத மாமன்ற கூட்டத்தில், தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும் என மேயர் சண்.ராமநாதன் அறிவித்தார். அதன்படி “நம்ம வார்டில் நம்ம மேயர்” என்ற இலக்குடன் தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல்வார்டில் புதன்கிழமை காலை பள்ளியக்ரஹாரம் பகுதியில் மேயர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாநகராட்சி பள்ளியை பார்வையிட்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ்செல்வன், புண்ணியமூர்த்தி, மேத்தா,  மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு நிலை அதிகாரிகள் உடனிருந்தனர்.