districts

‘மாண்டூஸ்’ புயல் எச்சரிக்கை எதிரொலி: தஞ்சை வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு

தஞ்சாவூர், டிச.7 -  மாண்டூஸ் புயல் எச்சரிக்கை காரண மாக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் செவ்வாயன்று தஞ்சாவூருக்கு வந்தனர். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப் பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டூஸ் என  பெயரிடப்பட்டுள்ளது.  இதனால், தமிழகத்தில் வட கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச் சேரி, காரைக்காலில் பரவலாகவும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. புயல் எதிரொலியாக டிச. 8 ஆம்  தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில் மிக பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும் டிச.9 ஆம் தேதி வரை அந்தமான், தென் கிழக்கு, தென் மேற்கு  வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடல் பகுதிக்கு மீன வர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புயல் எச்சரிக்கை காரண மாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் இருந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உதவி  ஆய்வாளர்கள் அலோக் குமார் சுக்லா,  டி.வி.பாட்டீல் ஆகியோரது தலைமையி லான 25 பேர் அடங்கிய குழுவினர் வெள்ள  தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட பாது காப்பு உபகரணங்கள் ஆகியவற்றுடன் வந்த னர். இந்த மீட்புக் குழுவினரை தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மீட்பு குழு வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ரெட் கிராஸ் பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் வரவேற்று ஒருங்கி ணைத்து வருகின்றனர்.