பாபநாசம், ஜன.10- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை களுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகளை கொண்டது. இச்சாலை ஆங்காங்கே குண்டும், குழியு மாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலை யில் உள்ளது. இதிலும், தனியார் பேருந்து கள் அதிவிரைவாகச் செல்கின்றன. ஆபத்தை உணராமல் பயணிகளும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன.
வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த கோரிக்கை
தனியார் பேருந்துகளின் அதிவேகத் தால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்து டன் செல்கின்றனர். சமீபத்தில் பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, அய்யம் பேட்டையிலிருந்து பாபநாசம் நோக்கி இந்தச் சாலையில் வரும் போது, சரபோஜி ராஜபுரம் அருகே கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இதன் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்திக் கொண்டு, உரசுவது போல் சென்றது. இதை பார்த்த எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, பயணி களை அச்சுறுத்தும் வகையில் வந்த தனி யார் பேருந்து குறித்து போக்குவரத்து அதி காரிகளுக்கும், அய்யம்பேட்டை காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சாலையில் செல்லும் தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண் டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.