districts

img

பல்வேறு கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

தஞ்சாவூர், மார்ச் 8-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்  காடு ஊராட்சியில் கிராம செயல் அலுவலக கட்டிடம், ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்றத் தலைவர் எம்.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற  உறுப்பினர் என்.அசோக்குமார் அடிக்கல் நாட்டினார்.  இதனைத் தொடர்ந்து ஆண்டிக்காடு ஊராட்சி, எட்டிவயல் கிரா மத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.18 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டடம் அமைப்ப தற்கு அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி பேரூராட்சி, பொன்னாங் கண்ணிக் காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல்  வகுப்பறை புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில், பொன்னாங்கண்ணிக்காட்டில் ரூ.67 லட்சத்தில்  கட்டப்படும் புதிய வகுப்பறை கட்டிடப் பணிகளை சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.