நாகப்பட்டினம், ஜன.30- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.33 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி அடிக் கல் நாட்டினார். நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலை வர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞான சேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் அந் தோணி கஸ்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.