districts

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

கும்பகோணம், நவ.10- கும்பகோணம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான இடத்தை தனி நபர்கள் சிலர்  ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கும்ப கோணம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  தகவலின் பெயரில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், கும்பகோணம் காவல்துறை கண்கா ணிப்பாளர் அசோகன். காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் வருவாய்த் துறை யினர், நகரமைப்பு பிரிவினர் சம்பந்தப் பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  இதில் அந்த பகுதியில் சிலர் அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்திருப்பது அதிகாரி களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி ஊழியர்கள் புதனன்று அகற்றினர். மேலும் மாநகராட்சிக்கு சொந்த மான இடங்கள், நீர்நிலைகள், பொது இடங்களில் அத்துமீறி நுழைந்து ஆக்கிர மிப்பு செய்பவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.